மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே யுள்ள பொறையாரில் கடந்த 20.10.2017 அன்று அரசு போக்குவரத்துக் கழக பணிமனையின் ஓய்வறை கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் 8 ஊழியர்கள் உயிரிழந்தனர். இவர்களின் 6 ஆம் ஆண்டு நினைவு தினம் வெள்ளியன்று கடைப்பிடிக் கப்பட்டது.
தமிழகத்தையே உலுக்கிய இந்த விபத்தில் உயிர்நீத்த ஊழியர்கள் பிரபாகரன், மணிவண்ணன், தனபால், பாலு, ராமலிங்கம், சந்திரசேகர், முனியப் பன், அன்பரசன் ஆகிய 8 பேரின் உருவப் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்வு பொறையார் அரசு போக்குவரத்து பணிமனை வளா கத்தில் நடைபெற்றது. பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
பேரூராட்சித் தலைவர் சுகுணசங்கரி குமரவேல், மத்திய ஒன்றிய செயலாளர் அமிர்த.விஜயக்குமார், நகரச் செயலாளர் முத்துராஜ், அரசு போக்குவரத்துக் கழக நாகை மண்டல துணை மேலாளர்கள் (வணி கம்) சிதம்பரகுமார், ராஜேஷ் (தொழில்நுட்பம்), பொறை யார் கிளை மேலாளர் ஆசீர்வாதம், கும்பகோணம் மத்திய தொமுச பொதுச் செயலாளர் பாண்டியன், துணைச் செயலாளர் வீரமணி மற்றும் போக்குவரத்து கழக ஓட்டுநர்கள், நடத்துநர்கள், அலுவலக ஊழி யர்கள், பணியாளர்கள் மலர்தூவி மரியாதை செய்தனர்